top of page
Group 39.png

குடிபோதை ஓட்டுநர்களுக்கு புதிய தண்டனை!

Author Logo.png

AM Sajith

27/12/24

குடிபோதையில் வாகனம் ஓட்டி கைது செய்யப்படுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அல்லது 12 மாதங்களுக்கு தடை செய்ய நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.


எனவே, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.டிசம்பர் 26 அன்று காலை 06.00 மணி வரை 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட 395 குடிபோதை ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்ததை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சிறப்பு நடவடிக்கையின் போது, 50 ஓட்டுநர்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், 120 பேர் அதிவேக ஓட்டத்திற்காகவும், 1262 பேர் போக்குவரத்து விதிமீறல்களுக்காகவும், 682 பேர் ஓட்டுநர் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காகவும், 5441 பேர் பிற போக்குவரத்து குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டனர்.


இந்த காலகட்டத்தில் மொத்தம் 7950 ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.திருவிழா காலத்தில் போக்குவரத்து விபத்துகளைக் குறைக்க டிசம்பர் 20 முதல் நாடு முழுவதும் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கையை தொடங்க பதில் காவல்துறை தலைமை அதிகாரி (IGP) உத்தரவிட்டிருந்தார்.

bottom of page