top of page
Group 39.png

அதிர்வு- செய்தியாளர் பர்ஸாத் வீட்டில் இருந்து கடத்தல், கொடூர தாக்குதல், கொலை மிரட்டல்!

Author Logo.png

Mohamed Sajith Alavudeen

11/5/25

அட்டாளைச்சேனை:


நேற்று இரவு சுமார் 10/05/2025 08.30 மணியளவில், "அதிர்வு" செய்தி நிறுவனத்தின் முக்கிய செய்தியாளர் பர்ஸாத் தனது வீட்டில் இருந்தபோது, வாழ்க்கையே புரட்டிப் போட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.


அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட குழு மோட்டார் வாகனத்தில் நேரடியாக அவரது வீட்டுக்கு வந்து. அவர்கள் தங்களை அரசு அதிகாரிகள், குறிப்பாக "CID" மற்றும் இராணுவத்திலிருந்து வந்தவர்கள் என கூறியுள்ளனர்.

வீட்டின் கதவை பலவந்தமாகத் திறந்து, பர்ஸாத்தை குடும்பத்தினரின் முன்னிலையில் கட்டாயமாக இழுத்து வெளியே கொண்டுபோனார்கள்.

அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது – "நீங்கள் எதுவும் பேசக்கூடாது. இல்லையெனில் உங்கள் அனைவருக்கும் உயிருக்கு ஆபத்து!" என்று அவர்கள் கூச்சலிட்டனர்.


வாகனத்தில் உள்ளபோதே, பர்ஸாத் மீது பலமுறை அடித்தும், முகத்தில் அறைந்தும், "உடனே உன் செய்தி பக்கத்தை மூடு. இனிமேல் ஒரு வார்த்தை கூட எழுதக்கூடாது. இல்லையெனில் உன் குடும்பம் முழுவதும் அழிந்து போகும்," என்று அவர்கள் மிரட்டினர்.

அவரது மொபைல், லேப்டாப், மற்றும் அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.


"நீ எங்கே இருந்தாலும், எங்களை எதிர்த்து எழுதினால், தேடி வந்து உன் வாழ்க்கையை அழித்துவிடுவோம்," என்று அவர்கள் கடைசியாக கொலை மிரட்டல் விடுத்தனர்.


இந்த சம்பவம், இலங்கையில் ஊடக சுதந்திரம் முற்றிலும் அழிந்துவிட்டது என்பதற்கான மிகப்பெரிய சாட்சி.

"நாட்டில் உண்மையை எழுதும் உரிமையே இல்லை. அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்குள் வந்து, பத்திரிகையாளர்களை கடத்தி, அடித்து, கொலை மிரட்டல் விடுகிறார்கள். இது ஒரு ஜனநாயக நாடா?" என்று "அதிர்வு" நிர்வாகம் கேட்கிறது.


"அதிர்வு" செய்தி நிறுவனம், இந்த கொடூர சம்பவத்தை உடனடியாக காவல்துறையில் புகார் செய்ய உள்ளது. மேலும், சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்புக்கும் (IFJ), மனித உரிமை அமைப்புகளுக்கும் முறையிட உள்ளோம்.


"எங்களை எவ்வளவு மிரட்டினாலும், அடித்தாலும், உண்மையை சொல்லும் போராட்டம் தொடரும்!" என்பதே எங்கள் உறுதி.


அதிர்வு செய்தி நிறுவனம்.

bottom of page