top of page
Group 39.png

ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் ஆண்டு நினைவுக்கு முன் இலங்கை தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

Author Logo.png

Mohamed Nizam Farzath

28/4/25

இலங்கையின் மனம்பிட்டிய கிராமத்தில் உள்ள லிவிங் கிரிஸ்ட் தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு ஆயுததாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.


 இதில் யாரும் காயமடையவில்லை; ஆனால் தேவாலயத்தின் ஜன்னல் சேதமடைந்தது. இந்த சம்பவம், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலின் ஆண்டு நினைவுக்கு முன்பாக, நாட்டில் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் நடந்ததும், போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். சந்தேகநபர், மனம்பிட்டிய மெயின் ரோட்டில் வசிக்கும் 38 வயது ஆண் என்று அடையாளம் காணப்பட்டார். அவரை போலீசார் பிடித்து, அவரிடம் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். ஆரம்ப விசாரணைகளில், இந்த தாக்குதல் தேவாலய பாஸ்டருடன் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தால் நடந்ததாக தெரிகிறது.


சாட்சியங்களின்படி, சந்தேகநபர் முதலில் தேவாலய வாயிலுக்கு வந்து சுற்றிப்பார்த்து, பின்னர் சாலைக்கு திரும்பிச் சென்று ஒரு ரவையை சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஈஸ்டர் பருவத்தில் இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவின் பெரும்பாலான தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய போலீசும் இராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு, 2019 ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களை "நம்பிக்கையின் வீரர்கள்" என்கிற சிறப்பு நினைவஞ்சலியில் கத்தோலிக்க திருச்சபை மரியாதை செய்ய உள்ளது.


இதே நேரத்தில், தாக்குதலுக்குப் பிறகு பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லையென திருச்சபை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. கடந்த கால விசாரணைகளில், தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களுக்கும் இராணுவ உளவுத்துறைக்கும் தொடர்புகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

bottom of page