
இலங்கையின் முஸ்லிம் சமூகம் தீவிரவாத சமூகமாக இருப்பதால் அதனுள் இருந்து வந்த பயங்கரவாத குழு ஒன்று தனியாக யார் உதவியும் இல்லாமல் தாக்குதலை நடாத்தியது என்று சொல்கிறது. புலனாய்வுப் பிரிவோ வேற்று நாட்டு புலனாய்வுப் பிரிவுகளோ மட்டுமல்லாமல் இலங்கையில் இருந்த முஸ்லிம் அல்லாத ஆயுதக் குழுக்கள்கூட இதில் சம்பந்தப்படவில்லை. சிரியாவில் இருந்த ஒரு தீவிரவாதக் குழு தன் வழிகாட்டலை மட்டும் கொடுத்திருக்கிறது என்கிறார்.
(கடந்த இரண்டு வாரங்களாக, தன் புத்தகத்தில் இருப்பவை உண்மை என்று நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நிறுவ முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்)
எழுத்தாளர் பற்றி:
அவரைப் பற்றி விக்கிபீடியா இணையத்தளம் என்ன சொல்கிறது என்று சொல்கிறேன்.
குறித்த எழுத்தாளர், 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். (தலைப்புகளைப்பார்த்தால், முஸ்லிம்களும் இஸ்லாமும் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளுக்கும் உலகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பது தான் மொத்தமும்.)
சிங்கப்பூரின் Rajaratnam School of International Studies இல் பேராசிரியராக இருக்கிறார்.
தேசிய, சர்வதேச பாதுகாப்பு பற்றிய 30 வருட நிபுணத்துவம் இருக்கின்றது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரமாக தரப்பட்டுள்ள உரிய லிங்க் "404 page not found" என்கிறது. (கடல்லேயே இல்லையாம்)
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், யெமன், லிபியா, சவூதி அரேபியா போன்ற இடங்களில் தீவிரவாதிகளை பேட்டி கண்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. (CIA இன் சட்ட விரோத வதைமுகாம்களுக்குள் போய் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மனிதர்களுடன் உரையாடி இருக்கிறார். அப்படியான முகாம்களுக்குப் போய் வருவதற்கு CIA அவரை அனுமதிக்கிறது என்கிறார்) ஆனால் அதற்குத் தந்துள்ள ஆதாரத்தை வாசித்ததால் அந்த இடத்தில் அப்படி எதுவும் இல்லை.
2003 இல், ஹம்பலி என்றழைக்கப்பட்ட ரிழ்வான் இஸாம்தீன் என்னும் ISIS உறுப்பினர் அடிக்கடி அவுஸ்திரேலியா வருவதாகவும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு விமானத்தாக்குதல் ஒன்று செய்ய இருப்பதாகவும் இலவச ஆலோசனை சொல்லப் போய், அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவு (ASIO) வாயால் "சும்மா சும்மா அடிச்சி விடுபவர்" பட்டம் பெற்றார்.
2004 இல் அல்காஇதாவுக்காக நிவுசிலாந்தில் நிதி சேகரிப்பதற்கான விளம்பரங்களை தன் கண்ணகளாலேயே கண்டதாக சொல்லி நிவுசிலாந்து நிதிப் புலனாய்வுப் பிரிவால் "நம்பகத்தன்மை மிகவும் குறைந்தவர் (aka பொய்யர்)" பட்டம் பெற்றார்.
2011 இல் கனேடிய லாபநோக்கற்ற நிறுவனம் ஒன்று வேறு ஒரு தீவிரவாத நிறுவனத்தின் முகம் என்று பத்திரிகைப் பேட்டி ஒன்றில் தெரிவிக்கப் போய், அவர்மீது அந்த நிறுவனம் தொடுத்த வழக்கில் அவர் சொன்னவை அனைத்தும் பொய் (unequivocally and incontrovertibly false and untrue) என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
2017 இல், பங்களாதேஷில் ISIS இருக்கின்றது என்று இலவச ஆலோசனை சொல்லப்போய், "அந்தாளுக்கு உண்மையான பிரச்சினைகள் பற்றி எதுவும் தெரியாது" என்று பங்களாதேஷ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வாயால் ஆசீர்வாதம் பெற்றார்.
அவருடைய புத்தகம் ஒன்று பற்றி ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் Pacific Journalism review இல் "இந்தோனேஷியா பற்றிய அவரது கருத்துகளுக்கு ஒரே வகையான ஒரு சில தகவல் மூலங்களில் இருந்து மட்டும் தகவல் பெற்றிருக்கிறார். (aka தெளிவாக பக்கச்சார்பாக எழுதி இருக்கிறார்) விடயதானம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர், இந்தோனேஷிய ராணுவம் பற்றியும் புலனாய்வுத்துறை பற்றியும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாதவர்" என்று பட்டம் பெற்றார்.
ஒரு தடவை ஐநா சபையின் ஆயுதக் களைவு பற்றிய பிரிவு நடாத்திய செமினார் ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி ஐநா சபையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் "பிரதம புலனாய்வாளார்" (cheif investigator) என்று தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள முயற்சித்தார்.